Opening bell: வீழ்ச்சியுடன் தொடங்கிய சென்செக்ஸ், நிஃப்டி..ஐடி பங்குகள் கவனம்?!

Opening bell: சர்வதேச சந்தைகளில் நிலவி வரும் கலவையான காரணிகளுக்கு மத்தியில், இன்று (மார்ச் 21) இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் சரிவில் காணப்படுகின்றன. குறிப்பாக சென்செக்ஸ் 119.55 புள்ளிகள் குறைந்து, 76,228.51 புள்ளிகளாகவும், நிஃப்டி 17.95 புள்ளிகள் குறைந்து, தொடர்ந்து 23,172 என்ற நிலையில் 23,000 புள்ளிகளை கடந்தும் காணப்படுகிறது. இதில் 1384 பங்குகள் ஏற்றம் கண்டும், 817 பங்குகள் சரிவிலும், 158 பங்குகள் பெரிய மாற்றம் ஏதும் இன்றியும் காணப்படுகின்றன. இன்றைய ஏற்ற இறக்கத்தின் மத்தியில் பஜாஜ் பைனான்ஸ், ஓ.என்.ஜி.சி, நெஸ்டில்,…

Accenture: ஆக்சென்ச்சரின் அப்டேட் சொல்வதென்ன? இன்ஃபோசிஸ், விப்ரோ, டிசிஎஸ் பங்குகளும் வீழ்ச்சி காணுமா?

IT stocks: இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களாக இன்ஃபோசிஸ், விப்ரோ, டிசிஎஸ் உள்ளிட்ட ஐடி பங்குகள் வீழ்ச்சி காண வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இது சர்வதேச ஐடி நிறுவனமான ஆக்சென்ச்சரின் இரண்டாவது காலாண்டு முடிவானது பலவீனமாக வந்த நிலையில், அப்பங்கானது 10% மேல் நியூயார்க் சந்தையில் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதன் பாதிப்பு இந்திய நிறுவனங்களிலும் இருக்கும். இந்திய நிறுவனங்களின் வருவாய் வீழ்ச்சி காணும் என அஞ்சப்படுகிறது. இது அவற்றின் பங்கு விலையிலும் சரிவைக் காண காரணமாக அமையலாம். எச்சரிக்கை மணியா? இந்திய ஐடி நிறுவனங்களுக்கான…

Closing Bell:சென்செக்ஸ் 899 புள்ளிகள் ஏற்றத்தில் முடிவு! நிஃப்டியின் போக்கு என்ன?

Closing Bell: இந்திய ஈக்விட்டி குறியீடுகள் அனைத்தும் ஏற்றம் கண்டு முடிவடைந்த நிலையில், சென்செக்ஸ் 899 புள்ளிகள் அல்லது 1.19% அதிகரித்து, 76,348.06 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது. நிஃப்டி குறியீடானது 283.05 புள்ளிகள் அல்லது 1.24% ஏற்றம் கண்டு, 23,190.65 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது. சர்வதேச அளவிலான சாதகமான காரணிகளுக்கு மத்தியில், இன்று பங்குச் சந்தையில் முக்கிய குறியீடுகள் கேப் அப் ஆகி தொடங்கின. முடிவிலும் நிஃப்டி 23,000 புள்ளிகளுக்கு மேல் முடிவடைந்துள்ளது. அனைத்து குறியீடுகளும் ஏற்றத்தில் முடிவடைந்துள்ள நிலையில், மெட்டல், மீடியா, ஐடி, எஃப்.எம்.சி.ஜி, ஆட்டோ,…

Hero MotoCorp: உச்சத்தில் இருந்து 40% மேல் வீழ்ச்சி: இப்போது வாங்கி போடலாமா?

Hero MotoCorp: சர்வதேச அளவில் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோகார்ப், தற்போது கவனத்தில் கொள்ள வேண்டிய பங்குகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. தற்போதைய சூழலில் 3,537 ரூபாயாக காணப்படுகிறது. இது இப்பங்கின் 52 வார குறைந்தபட்ச விலையான 3,461.60 ரூபாய்க்கு அருகில் காணப்படுகிறது. இப்பங்கின் 52 வார உச்ச விலை 6,246.25 ரூபாயாகும். கடந்த 1 வருட வரலாற்றை பார்க்கும்போது இப்பங்கானது 22% மேலாக சரிந்து காணப்படுகிறது. இதே அதன் வரலாற்று உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 40% மேல் வீழ்ச்சி கண்டுள்ளது. தொடர்ந்து…

Infosys: இன்ஃபோசிஸ் கொடுத்த பலத்த அடி: முதலீட்டாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

Infosys: இன்ஃபோசிஸ் நிறுவன பங்கானது, சர்வதேச தரகு நிறுவனமான மார்கன் ஸ்டான்லி டவுன் கிரேட் செய்த நிலையில், பங்கு விலையானது 4% மேல் சரிவைக் கண்டு முடிவடைந்துள்ளது. இது ஐடி நிறுவனம் மெதுவான வளர்ச்சி காணலாம் மற்றும் பங்கு மதிப்பில் அழுத்தம் என பல காரணிகளை சுட்டிக் காட்டியுள்ள தரகு நிறுவனம், ரேட்டிங்கை ஓவர் வெயிட் என்பதில் இருந்து, ஈக்வல் வெயிட் என குறைத்துள்ளது.  இத்தகைய சூழலில் இலக்கு விலையையும் 2,150 ரூபாயில் இருந்து 1,740 ரூபாயாக குறைத்துள்ளது. கடும் வீழ்ச்சி? இந்திய ரூபாய்…

Reliance: குட் நியூஸ்.. இரண்டாவது முறையாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்க்கு அப்கிரேட்.. ஏன்?

பங்குச் சந்தைகள் என்ன தான் வீழ்ச்சி கண்டாலும், வலுவானஅடிப்படைகளைக் கொண்ட சில முன்னணி நிறுவன பங்குகள் கவனத்தில் கொள்ள வேண்டியவையாக பார்க்கப்படுகின்றன. அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் பங்கு முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance industries). இப்பங்குகுறித்து சர்வதேச தரகு நிறுவனமான மெக்குவாரி, அதன் மதிப்பீட்டை மேம்படுத்தியுள்ளதோடு,இலக்கு விலையையும் 15% அதிகரித்துள்ளது.  தரகு நிறுவன அப்டேட்! தரகு நிறுவன அறிக்கையில் நியூட்ரல் என இருந்த முந்தைய ரேட்டிங்கை,அவுட் பெர்பார்ம் என அப்கிரேட் செய்துள்ளது. அதோடு இலக்கு விலையை 1,300 ரூபாயிலிருந்து,1,500…

Stock update: டிரம்பின் அடாவடி.. பங்குச் சந்தையின் போக்கு எப்படி இருக்கும்?

share market updates:இந்திய பங்குச் சந்தைகள் கடுமையான ஏற்ற இறக்கத்தை கண்டு வரும் சூழலில், இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. குறிப்பாக பங்குச் சந்தையில் இன்னும் சிறிது காலத்திற்கு முதலீடுகளை தள்ளிப்போடலாமா என்ற கவலையும் எழுந்துள்ளது. ரணகளம் தான்? அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்றத்தில் இருந்தே, அதிபர் டிரம்ப் பல்வேறு அதிரடியான அறிவிப்புகளை கொடுத்து வருகிறார். குறிப்பாக அமெரிக்காவின் பொருளாதாரத்தை மேம்படுத்துவோம் என்ற பெயரில், அண்டை நாடுகளுக்கு வரி அதிகரிப்பை செய்து வருகிறார். இதில் வரவிருக்கும் ஏப்ரல்…

Market Update: ஒரு பங்கை விற்கும்போது அவசியம் தெரிந்து கொள்ள முக்கிய அம்சங்கள்?

பங்குச் சந்தை முதலீட்டில் ஆர்வம் அதிகரித்திருந்தாலும், நம்மவர்களுக்கு ஒரு பங்கை எப்போது வாங்குவது, விற்பனை செய்வது என தெரிவதில்லை. குறிப்பாக வாங்கும்போது எப்படியோ சிலர் சரியாக தேர்வு செய்திருந்தாலும், சரியான நேரத்தில் லாபத்தை புக் செய்யத் தெரிவதில்லை. இதனால் பலரும் நஷ்டத்தையே சந்திக்கின்றனர். சந்தையில் பங்குகளை எப்போது வாங்கலாம் என பரிந்துரை செய்யும் சிலர், எப்போது விற்பனை செய்யலாம் என்பதை கூறுவதில்லை. முதலீட்டாளர்கள் பலரும் குறைந்த விலையில் பங்குகளை வாங்கி விடுவர். ஆனால் அது எந்த அளவுக்கு செல்லும், எந்த சமயத்தில் வெளியேறலாம் என்பது…