MTNL : மகாநகர் டெலிபோன் நிகாம் லிமிடெட் நிறுவன பங்கானது மார்ச் 13 இன்றைய வர்த்தக தினத்தில் 18% மேல் அதிகரித்து, 51.30 ரூபாய் என்ற உச்சத்தை எட்டியுள்ளது. இந்த ஏற்றம் இன்னும் தொடருமா, அல்லது மீண்டும் தொடருமா, தற்போது வாங்கலாமா வேண்டாமா என பல கேள்விகள் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
பொதுத்துறையை சேர்ந்த டெலிகாம் நிறுவனமான எம்.டி.என்.எல் 2,134.61 கோடி ரூபாய் நிதியை பெற்றுள்ளது. இது அதன் இடங்கள் மற்றும் கட்டிடங்கள் உள்ளிட்ட சொத்துக்களை ஜனவரி 2025 வரையிலான காலகட்டத்தில், பணமாக ஆக்கியதன் மூலம் கிடைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புகள் வெளியானதை தொடர்ந்து தான் பங்குகள் விலை தாறுமாறான ஏற்றம் கண்டுள்ளன.
மெகா நிதி திரட்டல்!
பொதுத்துறை நிறுவனம் குறித்த இந்த சாதகமான தரவானது மக்களவையில் தகவல் தொடர்புத் துறை இணையமைச்சர் பெம்மாசானி சந்திரசேகர் பகிர்ந்து கொண்டுள்ளார். மேற்கண்ட தரவுகளின் படி, பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்கள் முறையே 2,387.82 கோடி ரூபாய் மற்றும் 2,134.61 கோடி ரூபாய் நிதியை திரட்டியுள்ளன. கூடுதலாக இதே காலகட்டத்தில் கோபுரம் மற்றும் ஃபைபர் உள்ளிட்ட சொத்துக்கள்-ஐ பணமாக்கியதன் மூலம், பி.எஸ்.என்.எல் 8,204.18 கோடி ரூபாயும், எம்.டி.என்.எல் 258.25 கோடி ரூபாயும் ஈட்டியுள்ளன.
அரசின் ஒப்புதலுடன் அங்கீகரிக்கப்பட்டு, சொத்துகளை பணமாக்குதல் செய்யப்படுகிறது. இந்த பணமாக்கதலானது தொய்வில் இருக்கும் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு பயனுள்ள ஒன்றாக இருக்கலாம். தொடர்ந்து விரிவாக்க பணிகள் மற்றும் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளில் முதலீடு செய்யப்படலாம். மேற்கொண்டு இனி வரும் காலங்களிலும் பொதுத்துறை நிறுவனங்கள் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்குமா என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாக பார்க்கப்படுகிறது.
பங்கு விலை நிலவரம்?
தற்போதைய சூழலில் மகாநகர் டெலிபோன் நிகாம் லிமிடெட் நிறுவன பங்கானது 12% அதிகரித்து, 48.69 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இப்பங்கின் 52 வார உச்ச விலை 101.93 ரூபாயாக காணப்படுகிறது. 52 வார குறைந்தபட்ச விலை 31.20 ரூபாயாகவும் காணப்படுகிறது. டெக்னிக்கலாக பார்க்கும்போது இப்பங்கானது ஏற்றத்திற்கு திரும்பியுள்ளது. இதில் ஆர்.எஸ்.ஐ 58.09 என்ற நிலையில் மேல் நோக்கி காணப்படுகிறது. இது விரைவில் 70-ஐ உடைத்து ஓவர் பாட லெவலுக்கு செல்லவும் அதிக வாய்ப்புகள் காணப்படுகிறது. இது முக்கிய பிரேக் அவுட் விலையான 42.61 ரூபாய்க்கு மேல் தினசரி முடிவு அடிப்படையில் காணப்படுகிறது. மேற்கொண்டு 200 நாள் மூவிங் ஆவரேஜ் தவிர, மற்ற ஆவரேஜ்-களுக்கு மேல் பங்கு விலையானது காணப்படுகிறது. இதற்கிடையில் வால்யூமும் மிகப்பெரிய அளவில் காணப்படுவது, முதலீட்டாளர்கள் வாங்க ஆர்வம் காட்டுவதை காட்டுகிறது. நடப்பு ஆண்டில் இதுவரையில் 3% மேல் சரிந்து காணப்படும் பங்கானது , குறைந்த விலையில் வாங்க நல்ல வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது.
மேற்கொண்டு நிறுவனத்தின் பெரும் நிதி திரட்டலானது, அதன் வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம் என்பது இன்னும் சாதகமான காரணியாக பார்க்கப்படுகிறது. ஆக சரியான ஆலோசனையுடன் இப்பங்கை வாங்குவது குறித்து யோசிக்கலாம்.
Disclaimer: All the above articles and news are published for informational purposes. It is important to plan with the advice of proper experts and not to make final decisions regarding investment or savings based on this. The management is not responsible for any such planning based on this.
முதலீடு செய்வதற்கு முன்பு செபி பதிவு முதலீட்டு ஆலோசகர்களிடம் கலந்து ஆலோசித்த பின்னரே இறுதி முடிவு எடுக்க வேண்டும். அதுவே லாபகரமான முதலீட்டுக்கு உதவும்.