Opening bell: வீழ்ச்சியுடன் தொடங்கிய சென்செக்ஸ், நிஃப்டி..ஐடி பங்குகள் கவனம்?!

Opening bell: சர்வதேச சந்தைகளில் நிலவி வரும் கலவையான காரணிகளுக்கு மத்தியில், இன்று (மார்ச் 21) இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் சரிவில் காணப்படுகின்றன. குறிப்பாக சென்செக்ஸ் 119.55 புள்ளிகள் குறைந்து, 76,228.51 புள்ளிகளாகவும், நிஃப்டி 17.95 புள்ளிகள் குறைந்து, தொடர்ந்து 23,172 என்ற நிலையில் 23,000 புள்ளிகளை கடந்தும் காணப்படுகிறது. இதில் 1384 பங்குகள் ஏற்றம் கண்டும், 817 பங்குகள் சரிவிலும், 158 பங்குகள் பெரிய மாற்றம் ஏதும் இன்றியும் காணப்படுகின்றன.

இன்றைய ஏற்ற இறக்கத்தின் மத்தியில் பஜாஜ் பைனான்ஸ், ஓ.என்.ஜி.சி, நெஸ்டில், பஜாஜ் ஆட்டோ, பாரத் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இன்ஃபோசிஸ், விப்ரோ, டிசிஎஸ், டெக் மஹிந்திரா, டைட்டன் நிறுவன பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.  

நடப்பு வாரத்தில் கண்ட ஏற்றத்தை அடுத்து, வார இறுதி நாளான இன்று சற்று சரிவில் காணப்படும் குறியீடுகள், இன்னும் சரிவைக் காணலாம் என்ற அச்சமும் காணப்படுகிறது. எனினும் அமெரிக்காவின் வரி விதிப்புகள் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். இது அந்நிய முதலீடுகள் வெளியேற காரணமாக அமையலாம். இது அடுத்து வரும் சில வாரங்களுக்கு ஏற்ற இறக்கத்தை அதிகரிக்கலாம். சந்தையில் நிச்சயம் ஒரு சரிவு இருக்கும். இது சிறந்த நிறுவன பங்குகளை குறைந்த விலையில் வாங்க ஒரு வாய்ப்பாக அமையும். இது முதலீட்டாளர்கள் நம்பிக்கையை அதிகரிக்கும். குறிப்பாக ஸ்மால் கேப் மற்றும் மிட்கேப் பங்குகளின் சில்லறை முதலீடுகள் ஏற்கனவே அதிகரிக்க தொடங்கியுள்ளன.

இன்றைய நாளில் ஐடி நிறுவன பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்து வரும் சூழலில், இது இன்னும் வீழ்ச்சி காண வாய்ப்புகள் அதிகம் காணப்படுகிறது. ஆக முதலீட்டாளர்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது.

Disclaimer: All the above articles and news are published for informational purposes. It is important to plan with the advice of proper experts and not to make final decisions regarding investment or savings based on this. The management is not responsible for any such planning based on this.

மேற்கண்ட செய்திகள் தகவல் நோக்கத்திற்காக மட்டுமே பகிரப்படுகிறது. இதன் அடிப்படையில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். முதலீடு செய்வதற்கு முன்பு செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகர்களிடம் கலந்து ஆலோசித்த பின்னரே இறுதி முடிவு எடுக்க வேண்டும். அதுவே லாபகரமான முதலீட்டுக்கு உதவும். 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *