US fed meet: சர்வதேச பொருளாதாரத்தில் நிலவி வரும் நிச்சயமற்ற சூழலுக்கு மத்தியில், அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் பற்றிய முடிவு எப்படி இருக்குமோ, இது நிதி சந்தைகளில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துமோ என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் இருந்து வந்தது. ஒரு வேளை அமெரிக்க மீண்டும் வட்டி விகிதத்தை அதிகரிக்க தொடங்கி விட்டால், இந்தியா போன்ற முக்கிய சந்தைகளில் இருந்து வெளியேற வழிவகுக்கலாம். இது முதலீட்டாளர்களுக்கு பெரும் சுமையாக மாறலாம் என்ற கவலை நிலவி வந்தது.
ஆனால் தற்போதைக்கு எந்த பிரச்சனையும் இல்லை எனும் விதமாக அமெரிக்க முக்கிய அப்டேட்டை கொடுத்தூள்ளது. மார்ச் 19 அன்று நடந்த ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டத்தில் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை. மேற்கொண்டு நடப்பு ஆண்டில் இரு முறை வட்டி குறைப்பு செய்யப்படவும் வாய்ப்பிருப்பதற்கான சிக்னலையும் கொடுத்துள்ளது. இது பொருளாதாரத்தில் நிலவி வரும் நிச்சயமற்ற சூழலை எதிர்கொள்ள உகந்தவாறு இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்ப்புகள்!
நடப்பு ஆண்டிலும் பொருளாதார வளர்ச்சி மெதுவாகவே இருப்பதை இது காட்டுகிறது. இதற்கிடையில் நடப்பு ஆண்டின் இறுதியில் வேலையின்மை விகிதம் 4.4% ஆக உயரலாம் என எதிர்பார்க்கும் மதிப்பீடுகள், பணவீக்கமும் 2.7% ஆக உயரலாம் என்ற கவலையையும் எழுப்பியுள்ளது. தற்போது 2.5% என்ற நிலையில் பணவீக்கம் இருப்பது நினைவில் கொள்ளத் தக்கது. தற்போதைய லெவலை விட அதிகமாக இருப்பதாக மதிப்பிட்டுள்ளது ஒரு புறம் கவலை அளிக்கிறது என்றாலும், மறுபுறம் மேற்கண்ட இரு விகிதங்களுமே மத்திய வங்கியின் 2% இலக்கிற்கு மேலாகவே இருக்கிறது.
வட்டி குறைப்புக்கு வழிவகுக்கலாம்!
மேற்கண்ட விகிதங்களானது மத்திய வங்கிகள் எதிர்கொள்ளக் கூடிய நெருக்கடிகளையே காட்டுகின்றன. பணவீக்கம் அதிகரிப்பு என்பது வட்டி அதிகரிப்புக்கு வழிவகுக்கலாம். இது மெதுவான வளர்ச்சி, வேலையின்மை பற்றிய கவலையை அதிகரிக்கலாம். மேலும் அதிக வட்டி செலவினங்களை அதிகரிக்க வழிவகுக்கலாம். இது மேற்கொண்டு பணவீக்கத்தை அதிகரிக்க தூண்டலாம். ஆக அடுத்து வரவிருக்கும் மத்திய வங்கி கூட்டங்களில் வட்டி விகித குறைப்புக்கு வழிவகுக்கலாம். ஆக தற்போதைக்கு நிதி சந்தைகளில் பெரிய பாதிப்பு ஏதும் இருக்காது. வளர்ந்து வரும் சந்தைகளில் அதிகரித்து வரும் பிரச்சனைகளுக்கு மத்தியில், இந்தியா தொடர்ந்து வளர்ச்சி பாதையில் இருந்து வருகிறது. பெரிய அளவிலான அன்னிய முதலீடுகளை ஈர்த்து வருகிறது. ஆக இந்திய சந்தைகளுக்கும், முதலீட்டாளர்களுக்கும் அமெரிக்காவின் முடிவு தற்போதைக்கு பெரிய பாதிப்பை ஏதும் ஏற்படுத்தாது.
Disclaimer: All the above articles and news are published for informational purposes. It is important to plan with the advice of proper experts and not to make final decisions regarding investment or savings based on this. The management is not responsible for any such planning based on this.
மேற்கண்ட செய்திகள் தகவல் நோக்கத்திற்காக மட்டுமே பகிரப்படுகிறது. இதன் அடிப்படையில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். முதலீடு செய்வதற்கு முன்பு செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகர்களிடம் கலந்து ஆலோசித்த பின்னரே இறுதி முடிவு எடுக்க வேண்டும். அதுவே லாபகரமான முதலீட்டுக்கு உதவும்.