Hero MotoCorp: சர்வதேச அளவில் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோகார்ப், தற்போது கவனத்தில் கொள்ள வேண்டிய பங்குகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. தற்போதைய சூழலில் 3,537 ரூபாயாக காணப்படுகிறது. இது இப்பங்கின் 52 வார குறைந்தபட்ச விலையான 3,461.60 ரூபாய்க்கு அருகில் காணப்படுகிறது. இப்பங்கின் 52 வார உச்ச விலை 6,246.25 ரூபாயாகும். கடந்த 1 வருட வரலாற்றை பார்க்கும்போது இப்பங்கானது 22% மேலாக சரிந்து காணப்படுகிறது. இதே அதன் வரலாற்று உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 40% மேல் வீழ்ச்சி கண்டுள்ளது.
தொடர்ந்து இரு சக்கர பிரிவில் அதிகரித்து வரும் போட்டி, மின்சார வாகனங்கள் மீதான ஆர்வம் அதிகரிப்பு என பல காரணிகளுக்கு மத்தியில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளது. பல்வேறு சவால்களுக்கு மத்தியில் ஏற்கனவே சந்தை பங்கை இழக்க தொடங்கியுள்ளது. இதற்கிடையில் தான் பங்கு விலையானது கடும் வீழ்ச்சியை சந்தித்து வந்தது. கடந்த ஆறு மாதங்களில், ஒட்டுமொத்த நிலவரத்தை பார்க்கும்போது 5 மாதங்களில் பங்கு விலையானது சரிவிலேயே காணப்படுகிறது.
அதிகரிக்கும் போட்டி!
ஜப்பானை சேர்ந்த முன்னணி வாகன நிறுவனத்தின் இந்திய பிரிவானது, கடந்த பிப்ரவரி மாதத்தில் உள்நாட்டில் 3.84 லட்சம் இருசக்கர வாகனங்கள் மட்டுமே டெலிவரி செய்துள்ளது. இது கடந்த வருடத்தை காட்டிலும் 7% குறைந்துள்ளது. கடந்த ஏப்ரல் முதல் பிப்ரவரி மாதங்களில் மொத்தம் 51.02 லட்சம் வாகனங்களை டெலிவரி செய்துள்ளது. இதே காலகட்டத்தில் ஹோண்டா நிறுவனம் 49.25 லட்சம் வாகனங்களை டெலிவரி செய்துள்ளது. இவ்விரு நிறுவனங்களுக்கு இடையிலான இடைவெளி என்பது வெறும் 1.77 லட்சம் மட்டுமே. இந்த இடைவெளியானது கடந்த வருடத்தில் 8.90 லட்சம் வாகனங்களாக இருந்தது. இது ஹோண்டா நிறுவனத்தின் விற்பனை, சந்தை பங்கு எந்த அளவுக்கு அதிகரித்துள்ளது என்பதை காட்டுகிறது.
வாங்கலாமா?
குறிப்பாக கடந்த பிப்ரவரி மாதத்தில் ஹோண்டாவின் சந்தை பங்கு 24.27% ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு 23.82% ஆக இருந்தது. ஹோண்டாவின் பங்கு அதிகரித்துள்ள நிலையில், ஹீரோவின் சந்தை பங்கு கிட்டத்தட்ட 5% குறைந்துள்ளது. தொடர்ந்து கிராமப்புறங்களில் இருசக்கர வாகன விற்பனை அதிகமாக இருந்து வருகிறது. கிராமப்புறங்களில் விற்பனை ஃபடா தரவின் படி 9% மேல் அதிகரித்துள்ளது. எப்படி இருப்பினும் ஹீரோ பங்கு விலையானது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. தொடர்ந்து நீண்ட கால அடிப்படையில் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை நிறுவனம் எடுக்கலாம். குறிப்பாக அதன் முக்கிய வணிகங்களில் கவனம் செலுத்தலாம். குறிப்பாக பிரீமியம் ரக வாகனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கலாம். மின்சார வாகனங்கள் பிரிவில் கவனம், வருவாய் அதிகரிப்பை ஒவ்வொரு பகுதியில் இருந்து மேம்படுத்த கவனம் செலுத்த வேண்டும். இதற்கிடையில் ஆக்சிஸ் தரகு நிறுவனம் இப்பங்கை வாங்கலாம் என்றும், இலக்கு விலையை 5,285 ரூபாயாகவும் கொடுத்துள்ளது. ஆக சரியான ஆலோசனையுடன் இப்பங்கை வாங்குவது குறித்து திட்டமிடலாம்.
Disclaimer: All the above articles and news are published for informational purposes. It is important to plan with the advice of proper experts and not to make final decisions regarding investment or savings based on this. The management is not responsible for any such planning based on this.
மேற்கண்ட செய்திகள் தகவல் நோக்கத்திற்காக மட்டுமே பகிரப்படுகிறது. இதன் அடிப்படையில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். முதலீடு செய்வதற்கு முன்பு செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகர்களிடம் கலந்து ஆலோசித்த பின்னரே இறுதி முடிவு எடுக்க வேண்டும். அதுவே லாபகரமான முதலீட்டுக்கு உதவும்.