Adani: போட்டிகள் குறைவாக, அதிக வருமானம் உள்ள ஒவ்வொரு துறைகளாக பார்த்து பார்த்து காலடி எடுத்து வைத்து வரும் அதானி குழுமம், தற்போது கேபிள்ஸ் மற்றும் வயர்ஸ் துறையில் நுழைந்துள்ளது. அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான கட்ச் காப்பர் நிறுவனம், பிரணீதா ஈகோகேபிள்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தை 50% பங்குடன் இணைத்துள்ளதாகவும், அதன் மூலம் வயர்கள் மற்றும் கேபிள் வணிகத்தில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்துள்ளது.
கடும் வீழ்ச்சி!
அதானி குழுமத்தின் இந்த அறிவிப்பை அடுத்து கே இ ஐ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், பாலிகேப் இந்தியா லிமிடெட், ஹெவல்ஸ் இந்தியா லிமிடெட், ஆர் ஆர் கேபல், ஃபினோலெக்ஸ் கேபிள்ஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகள் விலையானது 14% வரையில் வீழ்ச்சி கண்டுள்ளன. இதில் கே இ ஐ இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்கானது 14% வீழ்ச்சியையும், பாலிகேப் நிறுவன பங்கானது 9% வீழ்ச்சியையும் கண்டுள்ளன. இதே ஹெவல்ஸ் இந்தியா மற்றும் ஃபினோலெக்ஸ் கேபிள்ஸ் உள்ளிட்ட பங்குகள் முறையே 4% வீழ்ச்சியையும் கண்டுள்ளன.
அதிகரிக்கும் போட்டி
அதானி குழுமத்தில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள நிறுவனமான பிரணீதா ஈகோகேபிள்ஸ், உலோக பொருட்கள் உற்பத்தி, கேபிள்கள் மற்றும் கம்பிகள் உற்பத்தி, சந்தைப்படுத்தல் மற்றும் விநியோகம், விற்பனை மற்றும் வாங்குதல் ஆகிய செயல்பாடுகளில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதானி குழுமத்தின் இந்த அறிவிப்பின் மத்தியில், இரண்டாவது பெரிய நிறுவனமான இப்பிரிவில் பார்க்கப்படுகிறது. ஏனெனில், கடந்த மாதம் பிர்லா குழுமம் அல்ட்ராடெக் மூலம் கேபிள்கள் மற்றும் வயர்கள் துறையில் நுழைவதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது இரண்டாவது பெரிய நிறுவனமாக அதானி குழுமம் அறிவித்துள்ளது.
பெரிய பாதிப்பு இல்லை!
அல்ட்ராடெக் நுழைவதாக அறிவித்த போதே வயர் நிறுவன பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. எனினும் அதன் வணிகத்தை ஆரம்பிக்க குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் ஆகும். இதனால் தற்போதைக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்று கூறப்பட்ட நிலையில், தற்போது அதானி குழுமம் பெரும் சவாலாக வந்துள்ளது. இந்த சூழலில் தான் மீண்டும் வயர்கள் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.
அல்ட்ராடெக் நிறுவனம் தனது உற்பத்தி மற்றும் விற்பனையை தொடங்கும்போது சரிவு இருக்கலாம், ஆனால் தற்போதைக்கு அது பிரச்சனை இல்லை. எனினும் அதானி குழும நிறுவனத்தின் நுழைவும் நிச்சயம் கடும் போட்டியாகவே இருக்கும்.ஆனால் இதுவும் அதன் தெளிவான வணிக அறிக்கையை வெளியிடும்போதே அது குறித்து முழுமையான புரிதல் கிடைக்கும். வயர்கல் நிறுவனங்களுக்கு நிச்சயம் போட்டி அதிகரிக்கும் என்றாலும், தற்போதைக்கு வாய்ப்பில்லை. எனினும் நீண்ட கால அடிப்படையில் கவனமாக இருப்பது நல்லது.
Disclaimer: All the above articles and news are published for informational purposes. It is important to plan with the advice of proper experts and not to make final decisions regarding investment or savings based on this. The management is not responsible for any such planning based on this.
மேற்கண்ட செய்திகள் தகவல் நோக்கத்திற்காக மட்டுமே பகிரப்படுகிறது. இதன் அடிப்படையில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். முதலீடு செய்வதற்கு முன்பு செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகர்களிடம் கலந்து ஆலோசித்த பின்னரே இறுதி முடிவு எடுக்க வேண்டும். அதுவே லாபகரமான முதலீட்டுக்கு உதவும்.