Stock market:கெளதம் அம்பானி, முகேஷ் அம்பானி உள்ளிட்ட பில்லியனர்களுக்கு செம அடி: பங்கு சந்தை வீழ்ச்சியால் கடும் இழப்பு!

Stock market: முகேஷ் அம்பானி மற்றும் கெளதம் அதானி உட்பட மொத்தம் ஏழு பணக்கார இந்தியர்களின் நிகர மதிப்பு, நடப்பு ஆண்டில் பங்குச் சந்தை வீழ்ச்சியால் கடும் சரிவைக் கண்டுள்ளது. இதில் அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானியின் மதிப்பு மோசமான சரிவைக் கண்டுள்ளதாக தரவுகள் காட்டுகின்றன.

கெளதம் அதானியின் நிகர மதிப்பானது 10 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக சரிவைக் கண்டுள்ளது. அதானியை தொடர்ந்து ஹெச்.சி.எல் டெக்னாலஜி நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடார், ஷபூர்ஜி பல்லோன்ஜி குழுமத்தின் ஷபூர் மிஸ்திரி, சன் பார்மாவின் திலீப் ஷாங்வி மற்றும் ரிலையன்ஸின் முகேஷ் அம்பானி உள்ளிட்டோர் அடங்குவர். 

கடந்த ஆண்டில் மேற்கண்ட 7 பில்லியனர்களின் மதிப்பு 309.80 பில்லியன் டாலர்களாக இருந்தது. நடப்பு  காலண்டர் ஆண்டில் இது 33.98 பில்லியன் டாலர்கள் குறைந்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆன முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 87.8 பில்லியன் டாலர்களாக உள்ளது. இவர் நடப்பு ஆண்டில் மட்டும் 3.13 பில்லியன் அளவுக்கு இழப்பை கண்டுள்ளார்.  ஏனெனில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்கானது வெறும் 2.54% மட்டும் ஏற்றம் கண்டுள்ளது. இதே ஜியோ ஃபைனான்ஷியல் சர்வீசஸ் 28.7% அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது.

எலான் மஸ்கிற்கும் பலத்த அடி! 

சர்வதேச பில்லியனரான எலான் மஸ்கின் நிகர மதிப்பும் டெஸ்லா பங்கு சரிவின் காரணமாக, 126 பில்லியன் டாலர் மதிப்பை இழந்து, 307 பில்லியன் டாலர்களாக உள்ளது. நடப்பு ஆண்டில் டெஸ்லா பங்கானது 37% அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கெளதம் அதானியின் நிகர மதிப்பும் 10.1 பில்லியன் டாலர் குறைந்து, 68.8 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. இது அதானி குழுமத்தின் அதானி எண்டர்பிரைசஸ் (12%), அதானி கிரீன் எனர்ஜி (22%), அதானி டோட்டல் கேஸ் (21.26%), அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் (6%), அதானி போர்ட்ஸ் 3% சரிவையும் கண்டுள்ள நிலையில், நிகர மதிப்பு கடும் சரிவைக் கண்டுள்ளது.

இழப்பு தான்!

ஷிவ் நாடாரும் 7.13 பில்லியன் டாலர்கள் இழப்பையும், ஷபூர் மிஸ்திரி 4.52  பில்லியன் டாலர் இழப்பையும், சாவித்திரி ஜிண்டால் 2.22 பில்லியன் டாலர் இழப்பையும்,. அசிம் பிரேம்ஜி 2.7 பில்லியன் டாலரையும், திலீப் ஷாங்வி 4.21 பில்லியன் டாலர் இழப்பையும் சந்தித்துள்ளனர். மேற்கண்ட சரிவுகள் அனைத்தும் அதனதன் பங்கு விலையானது சரிவைக் கண்ட நிலையில், நிகர மதிப்பும் சரிவைக் கண்டுள்ளன. இப்பங்குகள் விலையானது மீண்டு வரும்போது நிகர மதிப்பு உயரலாம். எப்படி இருப்பினும் மேற்கண்ட பங்குகளில் முதலீட்டாளர்களுக்கு இது இழப்பாகவே இருக்கும். தொடர்ந்து நஷ்டத்தில் இருந்தாலும், ஹோல்டு செய்து வைத்திருக்கும் முதலீட்டாளர்களுக்கு அது மீண்டு வரும் போது லாபம் என்றாலும், அதை எத்தனை பேர் செய்திருப்பார்கள் என்பது மிகப்பெரிய கேள்வியே.

Disclaimer: All the above articles and news are published for informational purposes. It is important to plan with the advice of proper experts and not to make final decisions regarding investment or savings based on this. The management is not responsible for any such planning based on this.

முதலீடு செய்வதற்கு முன்பு செபி பதிவு முதலீட்டு ஆலோசகர்களிடம் கலந்து ஆலோசித்த பின்னரே இறுதி முடிவு எடுக்க வேண்டும். அதுவே லாபகரமான முதலீட்டுக்கு உதவும். 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *